Monday, October 17, 2011

வாய்ப்பு

ஓடாத கடிகாரத்திற்கு மட்டுமே நாளொன்றுக்கு இரு முறை வாய்ப்புண்டு சரியான நேரம் காட்ட.

Tuesday, September 13, 2011

சந்திப்பு

கூறவிழைந்தவை அனைத்தும் என் கூடாரத்திற்குள்ளேயே கிடக்க,
அவளின் இயல்பினை ரசிப்பதிலேயே முடிவுற்றது அந்தச்சந்திப்பு...  

Monday, September 12, 2011

வருக... வருக...

இருள்சூழ்ந்த நம் சமூகத்தின் நிறமாகவேயிருந்த என் வலைப்பூ
தங்கள் வருகைக்காகவே வெள்ளையானது.

Saturday, August 27, 2011

பொங்கலே தமிழர்க்குப் புத்தாண்டு

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு.
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல்நாளே புத்தாண்டு.


- பாவேந்தர் பாரதிதாசன்

Saturday, August 13, 2011

விடுதலை நாள் வாழ்த்துக்கள்



வெள்ளையனை விரட்டியடிக்க மட்டுமே இந்தக்கருப்பன் தேவைப்பட்டான்.
போர்க்களத்தில் அருகில் நிறுத்தப்பட்டவன், விடுதலைக்குப்பின் வெகுதூரம் வீசிஎரியப்பட்டன்.
சாமியால் தாழ்த்தப்பட்டான், சாதியால் குலத்தொழில் செய்யப்பணிக்கப்பட்டான்.

ஆனால் பெண்ணுக்கு  மட்டும் இந்நிலை இல்லை.
நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, அன்பு என இவையனைத்தும் அவள் வடிவே எனப்பட்டாள், இறுதியில் எவ்விதச் சாதிவேறுபாடுகளும் இன்றிச் சமைத்தலுக்கும், சட்டிகழுவுதலுக்கும் அவளே வடிவானாள் கருப்பனின் வீட்டிலும். பெண் என்பவள் எந்தச்சாதியில் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்டவளாகவே வைக்கப்படுகிறாள்.

அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 11, 2011

ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தியார் அவர்கள்தம் வலைத்தளம்.
தந்தை பெரியார் மற்றும் ஈழம் தொடர்பான ஓவியங்கள் உள்ளன.

Wednesday, August 3, 2011

உடைத்தெறி என்னை

கால் நூற்றாண்டு காலக் கூச்சமானாலும் - அந்நிலை இப்பொழுதில்லை;
எதற்கிடத்தும் மருகுவேன் - அது என் காதலுக்கில்லை;
"பிறகு எதற்கு இந்த அமைதி?" என்று நீ கேட்பதாய் உணர்கிறேன்;
என் செய்வேன்? நீ அமைதியற்று அலைகிறாயே, அந்நிலை உணர்ந்தே;

ஒருவேளை என்னை உடைத்தெறிய நீ மீண்டு வருவாயோ?
இல்லை மென்மேலும் அமைதியற்று அலைவாயோ?
அதன்போது என்னை வெறுத்தே விடுவாயோ?

என் கூச்சத்தோடு உன் குழப்பமும் சேர்ந்துகொள்ள
நான் நீயாகிப்போனேன், அமைதியற்று அலைகிறேன்.

Friday, July 8, 2011

இழப்பு

பற்றிஎரிவதென்பது நெருப்பின் தன்மை, அதற்கேற்ப பொங்குவது என்பது பாலின் தன்மை. அதுவே கிண்ணம் தாண்டுகையில், உடன் நீர் சேர்க்க பொங்குதல் அடங்கும். விறகு தீர, சருகு கொண்டு சூடேற்றப்படுகின்றது. முடிவில் நெருப்பதன் நிலை மாறாமலிருக்க, மிகை நீர் உட்கொண்ட பால் அதன் தன்மையற்றுப் போவதே "இழப்பு"

அவன் - இவன் (திறனாய்வு)

மாடுகளை இறைசிக்காக விற்பவனை (ஆர்.கே) காவல் துறையிடம் காட்டிக்கொடுக்கிறார் ஒரு பாளையத்தார் (ஜி. எம். குமார் - ஹைனஸ்). சிறையிலிருந்து வெளியே வரும் ஆர்.கே, ஹைனசைகக் கொல்கிறான். கொன்றவனைப் பழி வாங்குகிறார்கள் ஹைனசின் வளர்ப்புகள் (விஷால் - வால்டர் வணங்காமுடி , ஆர்யா - கும்பிடறேன் சாமி). இம்மிகச்சிறிய மையப்புள்ளியை, களவுத்தொழில் செய்வோரின் வாழ்க்கையின் ஊடாகக் (களவு செய்வதை எங்கும் காட்சியாக்காமல்) கதைப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அப்பனின் இரு தாரத்துப் பிள்ளைகள் விஷாலும் (அம்பிகா), ஆர்யாவும் (ஜெயப்ரபா). பாளையத்தாருக்கும், களவுக்குடும்பத்துக்குமான பிணைப்பு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களே அற்ற பாளையத்தாரின் பாத்திரப்படைப்பும், அதற்கான தேர்வும் மிகப்பொருத்தம். கலைஞாகவும், களவானியாகவும் வருகிற விஷால் கதையின் பலம். எவ்வித வித்தியாசங்களும் இல்லாத பாத்திரப்படைப்பான ஆர்யாவும் பார்வையாளனுக்கு நெகிழ்ச்சியூட்டுகிறார். மொத்தமே பத்து நிமிட வருகை தான்; மிகச்சிறப்பாக பார்ப்போரை மிரள வைக்கிறார் ஆர்.கே. இவர்களைக்கொண்டு ஒரு கலகலப்பான படத்தைக்கொடுத்துள்ளார் இயக்குனர்.

காட்சிகளோடு ஒன்றிப்போகிற உரையாடல்கள்; வாழ்க்கையின் உதிரிகளை கதை மாந்தர்களாக்கியது - இவ்விரண்டிற்காக மட்டுமே இயக்குனர் கொண்டாடப்பட வேண்டியவர்.